நடிகை ராதிகா – பயில்வான் ரங்கநாதன் மோதல்: திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது என்ன? - Yarl Voice நடிகை ராதிகா – பயில்வான் ரங்கநாதன் மோதல்: திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது என்ன? - Yarl Voice

நடிகை ராதிகா – பயில்வான் ரங்கநாதன் மோதல்: திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது என்ன?



நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் நடிகை ராதிகா சரத்குமாரை சமீபத்ஹ்டில் திருவான்மீயூர் கடற்கரையில் பார்த்ததாகவும் அப்பொது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசி சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை ராதிகாவுக்கும் நடிகரி பயில்வான் ரங்கநாதனுக்கும் ஏற்பட்ட மோதல் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது திரைக்கூத்து யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகை ராதிகாவை திருவான்மியூரில் பார்த்ததாகவும் அப்போது அவர் தன்னிடம் தனது அம்மாவைப் பற்றி தவறாக பேசியுள்ளாயேமே என்று சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தான் ராதிகாவைப் பற்றி தவறாக எதையும் பேசவில்லை. அவரைப் பாரட்டியே பேசியுள்ளேன். பாராட்டி பேசும்போது நன்றி தெரிவிக்காத சினிமாக்காரர்கள் விமர்சிக்கும்போது கொதித்துப்போவது ஏன் என்று கேள்வி எழுப்பி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது திரைக்கூத்து யூடியூப் சேனைல் பேசியிருப்பதாவது: “சின்னத்திரையில் வெற்றிகரமாக செயல்பட்டு கோடி கோடியாக சம்பாதித்த நடிகை ராதிகா, பெரிய திரையில் ஒரு வெற்றிப் படத்தைக்கூட தயாரிக்க முடியவில்லை ஏன்?

விஜயகாந்த்தின் வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றியவர் ராதிகா. விஜயகாந்த் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எம்.ஆர்.ராதாவும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தக் காரணத்தால், இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றுகூட பேச்சு அடிப்பட்டது. ஆனால், புத்திசாலித் தனமாக, லாவகமாக அதிலிருந்து தப்பிவிட்டார் ராதிகா. விஜயகாந்த் அதற்கு முன்னால் எல்லாம் ஒரு ரவுடியாகவும் நாக்கை துருத்திக்கொண்டும் கண்களை உருட்டிக்கொண்டு வரும் பாத்திரங்களில் மட்டுமே நடித்தார். பாடி லேங்குவேஜ் அவ்வளவாக இல்லை. லேட்டஸ்ட் காஸ்ட்யூம் டிசன்கூட விஜயகாந்த்துக்கு அவ்வளவு பெரிசா இல்லை. விஜயகாந்த்துக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினார் ராதிகா. புதுமை இளைஞனாக விஜயகாந்த்தைக் கொண்டுவந்தார் ராதிகா சரத்குமார். விஜயகாந்த்தின் ஹேர் ஸ்டைலில் புதுமையைப் புகுத்திவரும் ராதிகாதான். அதே நேரத்தில், விஜயகாந்த்துக்கும் ராதிகாவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க் அவுட் ஆச்சி. ஆனால், ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் உடன் ராதிகா பழகுவது எம்.ஆர். ராதாரவிக்கு பிடிக்காது. எம்.ஆர்.ராதாரவி எம்.ஆர்.ராதாவின் மகன் என்பதால் ராதிகாவுக்கு அண்ணன் ஆகிறார். ஆரம்பத்தில், ராதிகா விஜயகாந்த் உடன் பழகியபோது எம்.ஆர்.ராதாரவி எதிராகத்தான் இருந்தார். அதே சமயத்தில், எம்.ஆர்.ராதாரவி படங்கள் இல்லாமல் திணறியபோது, அவரை அழைத்து தனது சீரியலில் நடிக்க வைத்தவர் ராதிகா. அதே மாதிரி, தன்னுடைய தங்கை நிரோஷாவையும் தன்னுடைய ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிக்க வைத்தவரும் ராதிகாதான். அதே மாதிரி, நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம் இவர் எம்.ஆர். ராதாவின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர். அவருக்கும், சித்திரையில் புதிய வாழ்வளித்தவர் ராதிகா சரத்குமார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே மாதிரி, நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் இருந்தபோது விஷால் உடன் கடுமையாக மோதினார். சரத்குமார் கடுமையாக வரிந்துகட்டிக்கொண்டு விஷாலை திட்டினார். ஆனாலும், அதே விஷால் தயாரித்து நடித்த படத்தில் ராதிகா நடித்தார். அந்த சமயத்தில், நாம் விஷாலை எதிரியாகக் கருதினோமே, நடிகர் சங்கத்தில் எதிரியாகத் 

திட்டினோமே என்ற பாகுபாடு இல்லாமல் விஷால் படத்தில் நடித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post