வடக்கில் பிறந்து 02 நாட்களேயான பெண் குழந்தை உட்பட 24 பேருக்கு கொரோனாத் தொற்று! - Yarl Voice வடக்கில் பிறந்து 02 நாட்களேயான பெண் குழந்தை உட்பட 24 பேருக்கு கொரோனாத் தொற்று! - Yarl Voice

வடக்கில் பிறந்து 02 நாட்களேயான பெண் குழந்தை உட்பட 24 பேருக்கு கொரோனாத் தொற்று!




யாழ்.மாவட்டத்தில் பிறந்து 02 நாட்களேயான பெண் குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 24 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்,
யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 08 வயதுச் சிறுமி ஒருவர் உட்பட 17 பேர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 02 நாள்களேயான பெண் குழந்தை உட்பட்ட இருவர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post