புதிய பிரதமரா? மறுக்கின்றார் மகிந்த - பதவிக்காலம் முடியும்வரை பிரதமர் பதவியில் தொடரப்போவதாக தெரிவிப்பு - Yarl Voice புதிய பிரதமரா? மறுக்கின்றார் மகிந்த - பதவிக்காலம் முடியும்வரை பிரதமர் பதவியில் தொடரப்போவதாக தெரிவிப்பு - Yarl Voice

புதிய பிரதமரா? மறுக்கின்றார் மகிந்த - பதவிக்காலம் முடியும்வரை பிரதமர் பதவியில் தொடரப்போவதாக தெரிவிப்பு



இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க பதவியேற்பதற்காக தான் பதவி விலகவுள்ளதாக வெளியான தகவல்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

எனது பதவிக்காலமும் கட்சியின் பதவிக்காலமும் முடிவடையும் வரை இலங்கையின் பிரதமராக நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரச்சினைகள் உள்ளபோதிலும் அவற்றிற்கு விரைவில்  தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம், மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனது பதவிக்காலம் முடிவடையும் வரை நான் பதவியிலிருப்பேன்,அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு சில காலம் உள்ளது நான் தற்போதைக்கு ஓய்வுபெறமாட்டேன்,தேசிய அரசாங்கம் என்ற ஊகம் பொய் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கும் சஜித்திற்கும் எனக்கும் எதுவுமில்லை இது பொய் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post