வெளியானது பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி - Yarl Voice வெளியானது பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி - Yarl Voice

வெளியானது பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி



வீதிகள் கடற்கரை  பூங்காக்கள் மைதானங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் நடமாடுவதற்கும் காணப்படுவதற்கும்  தடை விதிக்கும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இன்று மாலை ஆறுமணிமுதல் நான்காம் திகதி ஆறுமணிவரை இந்த தடை நீடிக்கும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது பொலிஸ்மா அதிபரின் எழுத்துமூல அனுமதியுடன் மாத்திரம் மேற்குறிப்பிட்ட இடங்களிற்கு பொதுமக்கள் செல்ல முடியும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post