மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு! - Yarl Voice மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு! - Yarl Voice

மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு!



கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும், மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post