எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் - இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!!! - Yarl Voice எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் - இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!!! - Yarl Voice

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் - இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!!!



எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, வாகனங்களை வைத்திருப்போர், fuelpass.gov.lk  என்ற இணைத்தளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, முன்பாக வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே, எரிபொருள் விநியோகம் இடம்பெறும் வரையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு 10 மணி முதல் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்திற்கு நிகராக லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
இதேவேளை, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்காக திருகோணமலை ஐ.ஓ.சி முனையத்தில் இருந்து 2 மில்லியன் லீட்டர் பெற்றோல் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சியின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
125 எரிபொருள் தாங்கி ஊர்திகள் ஊடாக இந்த பெற்றோல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post