வவுனியாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி இடம்பெற்றது - Yarl Voice வவுனியாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி இடம்பெற்றது - Yarl Voice

வவுனியாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி இடம்பெற்றது




தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (15.07.2022) வவுனியாவில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவைப் புகட்டி அவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமைத்திறனை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே வவுனியா கோயிற்குளத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சோ. சிவநேசன் தலைமையில் கோயிற்குளம் விஷ்ணு ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினராகச் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி. தேவராஜ் கலந்துகொண்டிருந்தார். பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து உரையாற்றியிருந்தார். இந்நிகழ்ச்சியில் கண்ணன் அறநெறிப் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆலய அறங்காவற் குழுவினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மாணவர்கள் அனைவருக்கும் கனடா ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வு மேற்கோள்கள் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post