ஜெயசூர்யா சுழலில் சிக்கி அவுஸ். சின்னாபின்னம் -இலங்கை இன்னிங்ஸ் வெற்றி- - Yarl Voice ஜெயசூர்யா சுழலில் சிக்கி அவுஸ். சின்னாபின்னம் -இலங்கை இன்னிங்ஸ் வெற்றி- - Yarl Voice

ஜெயசூர்யா சுழலில் சிக்கி அவுஸ். சின்னாபின்னம் -இலங்கை இன்னிங்ஸ் வெற்றி-



இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில்  தொடங்கியது. டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

லபுசேன் , ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினர். இறுதியில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
 தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. 2 ஆவது நாள் ஆட்ட நேர அந்த அணி முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்தது. குசல் மெண்டிஸ் 84 ஓட்டங்களும் ,மத்யூஸ் 6 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மறுநாள் 3 ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. மெண்டிஸ் 85,   மத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமல் இரட்டை சதம் அடிக்க  இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 554 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இலங்கை அவுஸ்திரேலியாவை விட 190 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

2 ஆவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. வோர்னர் 24, கவாஜா 29, லபுசன் 32, ஸ்மித் 0, ஹெட் 5, கிரீன் 23, ஸ்டார்க் 0, கம்மின்ஸ் 16, நாதன் லயன் 5, ஸ்வெப்சன் 0 என வரிசைக்கட்டி வெளியேறினர். 151 ஓட்டங்கள் எடுப்பதற்க்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக லபுசன் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார். சிறப்பாக பந்து வீசிய ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 
தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post