தமிழகத்துக்குள் மர்மப் படகில் இலங்கையர்கள் ஊடுருவலா? - Yarl Voice தமிழகத்துக்குள் மர்மப் படகில் இலங்கையர்கள் ஊடுருவலா? - Yarl Voice

தமிழகத்துக்குள் மர்மப் படகில் இலங்கையர்கள் ஊடுருவலா?



தமிழகம், வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்கக் கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகுக்கு அருகில் இருந்து சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட், சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள், 18இற்கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள் , மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து சிலர் இந்தப் படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் எனத் தமிழக கடலோரப்  பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர், கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் , க்யூ பிரிவினர் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post