நெருக்கடியிலிருந்து மீண்டெழ நல்லூரானைப் பிரார்த்திப்போம் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் - Yarl Voice நெருக்கடியிலிருந்து மீண்டெழ நல்லூரானைப் பிரார்த்திப்போம் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் - Yarl Voice

நெருக்கடியிலிருந்து மீண்டெழ நல்லூரானைப் பிரார்த்திப்போம் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில்

 

"இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகொண்டு, அனைவருக்கும் நலம் நல்க நல்லூர் கந்தனைப் பிரார்த்திப்போம்."

- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பல வரலாற்றுச் சிறப்புகளையும் மகிமைகளையும் கொண்ட நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தற்போது வெகுவிமர்சையாக நடந்து வருகின்றது. இன்று வியாழக்கிழமை கந்தப் பெருமான் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா விசேடமானது. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் இன, மத பேதங்களைக் கடந்து இலட்சக்கணக்கில் பக்தர்கள் இதன்போது ஒன்றுகூடுகின்றார்கள். வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் வருகின்றார்கள்.

இந்துக்களோடு சிங்கள பௌத்த மக்களும் ஏனைய சமயத்தவர்களும் தவறாது வழிபட்டு ஆசிபெறும் நல்லூர் கந்தனின் சிறப்பானது, இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான  உறவு வலுப்பெற உதவுகின்றது.

"நாட்டின் நெருக்கடிகளை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது. இந்தத் தருணத்தில் இலங்கை மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் விலகி, சுபீட்சமான வாழ்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் நலம் நல்க நல்லூர் கந்தனை அனைவரும் ஒன்றுகூடிப் பிரார்த்திப்போம்" என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post