நல்லைக்குமரன் நூல் வெளியீடும் யாழ். விருது வழங்கலும் - Yarl Voice நல்லைக்குமரன் நூல் வெளியீடும் யாழ். விருது வழங்கலும் - Yarl Voice

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் யாழ். விருது வழங்கலும்



யாழ்ப்பாணம் மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவும் யாழ். விருது வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வழங்கி கௌரவிக்கின்ற 'யாழ். விருது' இந்த ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கிவைக்கப்பட்டது. 

யாழ். மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்துக்கும் தமிழுக்கும் சமூகத்துக்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து 'யாழ். விருது’ வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ்வாண்டு ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க, சமய குரவர்களின் பாடல் பெற்ற சிவத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகப் பணிகளை ஆற்றி ஈழத்தில் சைவ சமயம் மறுமலர்சியுற துணை செய்து இறைபணி புரிந்த திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச் சபையினருக்கு 'யாழ். விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு ஆலயத் திருப்பணிக்கு நிதி உதவியை ஆற்றிய இந்திய அரசைக் கௌரவிக்கும் முகமாக யாழ். இந்தியத் துணைத் தூதுவருக்கு கௌரவிப்பு விருதும் வழங்கிவைக்கப்பட்டது.

விருது வழங்கலை அடுத்து  நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post