ருத்ரதாண்டவம் ஆடிய ஷூப்மன் கில் இரட்டை சதம்!! - Yarl Voice ருத்ரதாண்டவம் ஆடிய ஷூப்மன் கில் இரட்டை சதம்!! - Yarl Voice

ருத்ரதாண்டவம் ஆடிய ஷூப்மன் கில் இரட்டை சதம்!!




இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையில் இன்று நடைபெறும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 
ஷூப்மன் கில்லின் அபார இரட்டை சதத்துடன் இந்திய அணி 349 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியின் ஆரம்ப வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். 

ரோகித் 34 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன்பின் ஷூப்மான் கில்லுடன் இணைந்த துடுப்பாட்ட வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சூரியகுமார் யாதவ் 31 ஓட்டங்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ஓட்டங்கள், வாஷிங்டன் சுந்தர் 12 ஓட்டங்களை சேர்த்தனர். 

மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் 208 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இதனால் 50 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 5 ஓட்டங்களுடனும், ஷமி 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 

நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 350 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post