அரசுடனான பேச்சிற்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும்!! வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்து - Yarl Voice அரசுடனான பேச்சிற்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும்!! வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்து - Yarl Voice

அரசுடனான பேச்சிற்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும்!! வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்து



வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாணம் நாவற் குளியல் கடந்த வியாழக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாஜில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூத ரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்போது தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

இங் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது ...

தமிழ் மக்கள் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வான சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் அத்தகைய ஒற்றுமைக்கு  உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாக கூறினர்.

மேலும் அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான  இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post