ஹபரனையில் பிள்ளையார் கோவில் இடிக்கலாமாக இருந்தால் தையிட்டி விகாரை ஏன் அகற்றப்பட முடியாது? ரஜீவ்காந் - Yarl Voice ஹபரனையில் பிள்ளையார் கோவில் இடிக்கலாமாக இருந்தால் தையிட்டி விகாரை ஏன் அகற்றப்பட முடியாது? ரஜீவ்காந் - Yarl Voice

ஹபரனையில் பிள்ளையார் கோவில் இடிக்கலாமாக இருந்தால் தையிட்டி விகாரை ஏன் அகற்றப்பட முடியாது? ரஜீவ்காந்



ஹபரணையில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றை இடிக்க முடியுமாக இருந்தால் 
தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரையினை ஏன் அகற்றப்பட முடியாது ? என கேள்வி எழுப்பியுள்ளார், மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

மீண்டும் ஒரு 83 கலவரம் உருவாக வழிவக்கும் என்கிறார்கள், ஏன் சிங்களவர்கள் காட்டிமிராண்டிகளாகவா இருக்கின்றார்கள் ? அப்படியென்றால் அவர்களை திருப்திப்படுத்தவா இந்த நாடும் சட்டமும் அரசும் இருக்கின்றது ?  என சாடியுள்ளார். 

 கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டால் கலவரங்கள் ஏன் உருவாகுவதில்லை ? ஏன் என்றால் ஏனைய இனங்கள் பலம் குறைந்த  இனங்களாக இருப்பதனால்  தொடர்ந்து நசுக்கப்படுகின்றன. இது ஒரு அடக்குமுறை அரசியல்.என அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post