வட மாகாண கடற்தொழிலாளர்கள் ஐனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை - Yarl Voice வட மாகாண கடற்தொழிலாளர்கள் ஐனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை - Yarl Voice

வட மாகாண கடற்தொழிலாளர்கள் ஐனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை


புதிதாக உருவாகியுள்ள கோத்தபாயவின் அரசிடம் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையமும் இணைந்து 21 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில்
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அவர்கள் தமது கோரிக்கையில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய 21 முக்கிய பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளனர்.தாம் இதனை மிக விரைவில் கடற்தொழில் அமைச்சரை சந்தித்து நேரடியாக கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண மீனவர்கள் போர் முடிவடைந்து பல வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்று வரை பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக போரால் இடம்பெயர்ந்து வாழும் மீனவ மக்கள் தங்களின் பூர்விக காணிகள் மற்றும் மீன்பிடி இறங்கு துறைகளை முழுமையாக மீளவும் கையளிக்கப்படாமல் உள்ளது.

எனவே அவற்றை விடுவித்து மீனவ மக்கள் தங்கள் தொழிலை சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.மேலும் வடக்கில் பெண்களை தலைமையாக கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல உள்ளன.

அவர்கள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும்.எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்துதல்இசட்ட விரோத முறைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச கோரிக்கைகளை புதிதாக பதவியேற்றுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கையளிக்கவுள்ளதாகவும் இவற்றை நிறைவேற்றி தருமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன்இவடக்கு மாகாண கடற்தொழில் இணைய தலைவர் வீ.சுப்பிரமணியம்இமாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதி என்.இன்பம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post