தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதன் போது அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் சுடரேற்றிவைத்து அதனைத் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது கட்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.
Post a Comment