கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சார்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பணியாளர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அனைத்து தகவல்களும் இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டி பகுதி நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக திட்டமிடப்பட்ட நாடகமாகும்.
அதனை தாங்கள் கண்டறிந்து இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விளக்கமறியத்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளை வான் ஊடக சந்திப்பு ஒரு நாடகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment