விபத்தில் காயமடைந்தவர் சிசிக்சை பலனின்றி உயிரிழ்ப்பு - Yarl Voice விபத்தில் காயமடைந்தவர் சிசிக்சை பலனின்றி உயிரிழ்ப்பு - Yarl Voice

விபத்தில் காயமடைந்தவர் சிசிக்சை பலனின்றி உயிரிழ்ப்பு


மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

பருத்தித்துறை வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த பளைப் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நடராஜா பிறேமவாசன்வயது 45 என்பவரே உயிரிழந்தவராவார்

 ஏ9 வீதி கொடிகாமம் இராமாவில் கோவில் பகுதியில் 20ம் திகதி ஏ9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முன் சக்கரம் காற்றுப் போய் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த குடும்பத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post