இலங்கை ஐனாதிபதித்கு பிரத்தானிய பிரதமர் வழங்கிய பதில் - Yarl Voice இலங்கை ஐனாதிபதித்கு பிரத்தானிய பிரதமர் வழங்கிய பதில் - Yarl Voice

இலங்கை ஐனாதிபதித்கு பிரத்தானிய பிரதமர் வழங்கிய பதில்


இலங்கையுடன் சிறந்த இருதரப்பு நல்லுறவை முன்னெடுத்து செல்வதற்கு பிரித்தானிய மக்களும் தானும் எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அவரது தேர்தல் வெற்றியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் அனைத்து நன்மைகளும் கிட்ட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கடந்த 12ம் திகதி பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post