கொரோனோ தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 6850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளாந்தம் இந்தச் சட்டத்தை மீறுகின்ற நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் பயணிக்கின்ற வாகனங்களும் தடுத்து வைக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகவே மக்களிற்காக அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மதித்து அதனை மீறிமால் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment