நீதியின் குரல்கள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் - விக்கினேஸ்வரன் நம்பிக்கை - Yarl Voice நீதியின் குரல்கள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் - விக்கினேஸ்வரன் நம்பிக்கை - Yarl Voice

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் - விக்கினேஸ்வரன் நம்பிக்கை

நீதியின் குரல்கள் வெகு விரைவில் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் உண்மையானவர்கள் யார் நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரீயுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று தாக்கல் செய்திருந்தார். அவருடன் ஈபிஆர்எல்ப் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கெ.சிவாஐpலிங்கம் ஆகியோரும் நின்றிருந்தனர்.

இதன் பின்னர் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வந்து உங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? நீங்கள் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள். என ஊடகவியிலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..

யார் உண்மையானவர்கள் யார் நேர்மையானவர்கள் என்பது எங்களுடைய மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் பாராளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது என் மக்களுக்கு நான் கூறவிருவதாகவும் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post