நிர்க்கதி நிலையில் புலிகளின் மூத்த போராளியின் குடும்பம் - நேரில் சென்று மணிவண்ணண் உதவி - Yarl Voice நிர்க்கதி நிலையில் புலிகளின் மூத்த போராளியின் குடும்பம் - நேரில் சென்று மணிவண்ணண் உதவி - Yarl Voice

நிர்க்கதி நிலையில் புலிகளின் மூத்த போராளியின் குடும்பம் - நேரில் சென்று மணிவண்ணண் உதவி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளி பண்டிதரின் குடும்பத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவி செய்துள்ளது.

பண்டிதரின் தாயார் மற்றும் சகோதரன் வல்வெட்டித்துறையில் வசித்து வந்த நிலையில் அந்த வீட்டிலிருந்து அவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்ததது.

இதற்கமைய அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி நிர்க்கதியான நிலையில் நின்றிருந்த நிலையில் சம்பவத்தை அறிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணண் தலைமையிலான அக் கட்சி உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதன் போது பண்டிதரின் தாயார் மற்றும் சகோதரனுடன் கலந்துரையாடி அவர்கள் வசிப்பதற்காக தற்காலிக வீட்டு வசதிகளை முதற்கட்டமாக ஏற்படுத்திக் கொடுத்தனர். அத்தோடு அவர்களுக்கான நிரந்தர வீட்டை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

இதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளியான பண்டிதர் கடந்த 1985 ஆம் ஆண்டில் வீரச்சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   துற்போது அவரின் சகோதரர் மற்றும் தாயார் ஆகியோரே பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்னணி உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post