கட்சிகளைப் பார்க்காது சிறந்த தலைவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அடிகளார் வேண்டுகோள் - Yarl Voice கட்சிகளைப் பார்க்காது சிறந்த தலைவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அடிகளார் வேண்டுகோள் - Yarl Voice

கட்சிகளைப் பார்க்காது சிறந்த தலைவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அடிகளார் வேண்டுகோள்

எதிர்வரும் தேர்தலில் மக்கள் கட்சிகளை பார்க்காது சிறந்த தலைவர்களை தெரிவு செய்ய வேண்டுமென பங்குத்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

இலங்கை திருநாடானது எதிர்வரும் மாதம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது குறித்த தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளை பார்க்காது சிறந்த தலைவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முன்வரவேண்டும் என ரவிச்சந்திரன் அடிக்கிறார் கோரிக்கை விடுத்தார்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் 16 ஆசனங்களை ஒரு கட்சிக்கு வழங்கினோம் ஆனால் தற்போது வரை நமக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பிரச்சனை மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

 எனவே எதிர்வரும் தேர்தலின் போது மக்கள் விழிப்பாக கட்சிகளை நீங்கள் பார்க்காமல் சிறந்த தலைவர்களை தெரிவு செய்வதன் மூலம் நமக்கு முன்னால் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் அத்தோடு எதிர்வரும் தேர்தலில் அனைத்து மக்களும் பங்குபற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post