இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கோண்டாவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பத்தலைவர் இரு நாட்களாக மது போதையில இருந்துள்ளார். அவரது மனைவி உறவினர்களை பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி நேற்று முன்தினம் இரவு தீட்டியுள்ளார்.
காயங்களுக்கு உள்ளானவர் அயலவரின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
--
Post a Comment