யாழ் மாநகர முதல்வரைச் சந்தித்த இத்தாலி நாட்டின் தூதுவர் -தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice யாழ் மாநகர முதல்வரைச் சந்தித்த இத்தாலி நாட்டின் தூதுவர் -தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice

யாழ் மாநகர முதல்வரைச் சந்தித்த இத்தாலி நாட்டின் தூதுவர் -தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு


யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இலங்கைக்கான இத்தாலி நாட்டின் தூதுவர் ரிற்றா ஜி. மனெல்லா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று (6) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தூதுவர் யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக மாநகர முதல்வரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் யுத்த காலத்தில் நடைபெற்ற அழிவுகளுக்கு அப்பால் எத்தனையோ மறைமுகமான உளவியல் ரீதியான அழிவுகளை யுத்தத்திற்கு பின்னர்தான் சந்தித்துள்ளோம் என்பதை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனநாயக மறுப்புக்கள் காணாமல் போனோர் விடயம் காணி அபகரிப்பு காணி விடுவிப்பதில் உள்ள தாமதம் காடுகளைக் கையாளுதல் நிலங்களை பரிமுதல் செய்தல் போன்ற அத்தனை விடயங்களுக்கும் யுத்தம் முடிந்து இதுவரை எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை. காணி விடுவிப்புக்கள் இடம்பெற்றாலும் அதில் உள்ள தாமதம் குறித்து விளக்கனார்.

தொடர்ந்தும் கடந்த அரசின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் யாழ் நகர் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தூதுவருக்கு முதல்வர் விரிவான விளக்கம் ஒன்றை முன்வைத்தார்.

மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்இ மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அரசியல் நிலைமை தொடர்பிலும் புதிய புதிய அரிசயல் கட்சிகளின் உருவாக்கத்தினால் ஏற்படக் கூடிய சவால்கள் குறித்தும் தூதுவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த கருத்துப் போக்கையும்இ இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கின்ற அதிகார பகிர்வு நிலைப்பாடுகளை எவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது என்பதையும் மக்களின் நிலைப்பாட்டைக் காட்டும் விதங்கள் குறித்தும் விளக்கியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது என்பதையும் மக்கள் தம்ழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ச்சியான தமது ஆணையை வழங்கி வருகின்றார்கள் என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக இத் தீர்மானத்திலேயேதான் இருக்கின்றார்கள் என்றும் எதிர்காலத்தில் இவ் ஆதரவு இன்னும் அதிகரிக்கும் என்றும் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பாராளுமன்றில் உள்ள பலத்தை சிதைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் உதிரிக்கட்சிகளின் போக்குகள் குறித்து மக்கள் மிகுந்த தெளிவுடனே இருக்கின்றார்கள் என்பதையும் உறுதிபட முதலர்வர் தெரிவித்தார்.

சந்திப்பின் இறுதியில் தற்பொழுது அவர்களின் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தாக்கத்தின் விபரீதங்கள் குறித்தும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் தனது நாட்டு மக்களின் நிலைகுறித்த தனது கவலைகளை முதல்வருடன் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறாக கலந்துரையாடல் நிறைவில் தூதுவர் பிரமுகர்கள் வருகைப்பதிவு குறிப்பெழுதும் குறிப்பேட்டில் தனது வருகையின் குறிப்பையும் பதிவு செய்து கொண்டார்.

இச் சந்திப்பில் மாநகர ஆணையாளர் .இ.த. ஜெயசீலன் மற்றும் மாநகர செயலாளர் அ. சீராளன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post