கொரோனா தாக்கம் காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தல் - Yarl Voice கொரோனா தாக்கம் காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தல் - Yarl Voice

கொரோனா தாக்கம் காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொவிட் 19 தொற்று நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்இ இந்த அசாதாரண சூழலில் ஜனநாயக கடமையை முழுமையாக செயற்படுத்த முடியாது என்ற காரணத்தாலும் அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அதற்கு முழுமையான பங்களிப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளைஇ தேர்தலை பிற்போடுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணையாளரை கோரியிருந்தார்.

இதனிடையேஇ எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாடு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post