யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் கொரோனோ தொற்றாளர் அடையாளம் காணப்படவில்லை - Yarl Voice யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் கொரோனோ தொற்றாளர் அடையாளம் காணப்படவில்லை - Yarl Voice

யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் கொரோனோ தொற்றாளர் அடையாளம் காணப்படவில்லை

கொரோனோ தொற்று குறித்து எந்தவொரு தொற்றாளரும் யாழில் அடையாளம் காணப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ தொற்று சந்தேகத்தில் யாழ் போனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் எவருக்கும் கொரோனோ தொற்று அடையாளம் காணப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

இதே வேளை இன்று பிற்பகல் 4.30 மணி வரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்தவொரு தொற்றாளரும் இலங்கையில் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுக்கும் மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர்  இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் நேற்றைய தினம் இலங்கையில் இருந்து பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 102 என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post