பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டது.
இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக தேர்தல் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜுன் மாத முதல்வாரமளவில் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் குறைந்துவிடும் என்கிற எதிர்வுகூறலுக்கு மத்தியில் தேர்தல் திகதியை ஆணைக்குழு குறித்துள்ளது.
இதற்கிடைப்பட்ட காலத்தில் சுகாதாரத்துறையின் ஆலோசனைப்படி பிரசார செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதங்கள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகின்றது
Post a Comment