யாழ்ப்பாணத்தில் இதுவரை 222 பேருக்கு கொரோனோ தொற்றுப் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இவர்களில் 7 பேருக்கு மாத்திரம் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனோ சந்தேகத்தில் இதுவரையில் அனுமதிக்கப்பட்ட 81 பேருக்கும் அதே போன்று தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 141 பேருக்கும் கொரோனோ பரிசொதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கு மட்டுமே கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதே போன்று வைத்தியசாலைக்கு வெளியில் தனிமைப்படுத்தப்பட்ட வர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பெருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகையினால் 222 பேருக்கு இதுவரையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது. இதில் 7 பேருக்கு மட்டும் கொரோனோ வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மெலும் கொரோனோ சந்தேகத்தில் தற்போதும் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Post a Comment