யாழ் மாநகர சபையின் அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாவலர் கலாசார மண்பத்தில் துணை முதல்வர் துரைராசா ஈசன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாநகர நபையில் இந்த வருடத்திற்கான நான்காம் மாதக் கூட்டமே எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்றது.
யாழ் மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்திலெயே இதுவரை காலமும் நடைபெற்று வந்த மாநகர நபை அமர்வு தற்போது கொரோனோ தொற்று பாதிப்பு நிலைமைகள் காரணமாகவே நாவலர் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்திற்குள் சமூக இடைவெளியை பேணுவதற்கு போதுமான இடவசதி இல்லாத காரணத்தினாலேயே நாவலர் கலாசார மண்பத்தில் சமூக இடைவெளி பேணப்பட்டு கூட்டம் நடாத்தப்பட உள்ளது.
மேலும் சபையில் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புனுத் தாக்கல் செய்துள்ள நிலைமையில் இந்தமுறை இடம்பெறவுள்ள சபையின் கூட்டமானது துணை முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment