யாழில் இன்றும் 29 பேருக்கு கொரோனோ தொற்று ஆய்வு கூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார்
யாழில் இன்று 29 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.
* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்
* நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 20 பேர்
* யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 3 பேர்
இவ்வாறு 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்
Post a Comment