இலங்கையில் இன்று மட்டும் 32 கொரோனோ நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனோ வைரஸ் தொற்று நோயாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் அந்த நோயினால் சிகிச்சை பெற்று வருகின்றவர்களும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இன்று மட்டும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 32 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக பரிசொதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 303 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனோ தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரையில் 97 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment