இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனோ தாக்கம் - 5 நாட்களில் 120 பேர் அடையாளம் - Yarl Voice இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனோ தாக்கம் - 5 நாட்களில் 120 பேர் அடையாளம் - Yarl Voice

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனோ தாக்கம் - 5 நாட்களில் 120 பேர் அடையாளம்

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தாக்கம் இலங்கையிலும் தற்போது சடுதியாக அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கடந்த 18 ஆம் திகதி முதல் நேற்று 23 வரையான ஐந்த நாட்களில் மட்டும் 120 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் நேற்று  (23) இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 368 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.அதிலும் நேற்று மாத்திரம் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதே வேளை குறித்த வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரம் 107 பேர் குணமடைந்துள்ளனர். 226 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 173 பேர் தொடர்ந்தும்  மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post