காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகர் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 பேர் தொற்றுக்குள்ளானதுடன்இ யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும்.
இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளார் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்..
யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் 1ம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்திருக்கின்றது. எனினும் 1ம் கட்ட பரிசோதனையில் 80 தொடக்கம் 90 வீதமானதே அடையாளம் காணப்படும்.
ஆகவே 2ம்இ 3ம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தொற்றுள்ளவர்கள் பூரணமாக அடையாளம் காணப்படுவதுடன்இ தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தின் ஊடாக சமூக இடைவெளி பேணப்படுவதன் ஊடாக யாழ்.மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றை முற்றாக நீக்க முடியும்.
இது இலங்கையின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். மேலும் மாவட்டத்தில் தொற்று இல்லாமையினை தொடர்ந்து பேணுவதற்காக சில கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டங்களில் இருந்தும்இ வெளியிடங்களில் இருந்தும் உள் நுழைவதற்கு 2 தரைவழி பாதைகளே உண்டு.
அந்த பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன்இ காய்ச்சல் மற்றும் தொற்று தொடர்பான ஆரம்ப பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வதசிகளை செய்வதன் ஊடாக நிரந்தரமாக நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவர்கள் நேர்மையாக தங்களுக்கு தொற்றிருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக சுவிஸ் போதகர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தும் விமான நிலையத்தில் உண்மையை மறைத்து ஒரு பொய்யை கூறியதால் 7 பேர் நோய்வாய்ப்பட்டதுடன்இ யாழ்.மாவட்டத்தில் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. ஆகவே மக்களும் பாதுகாப்பாக இருந்து தொற்றிலிருந்து விடுபட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு உதவ வேண்டியது அவசியம் என்றார்

Post a Comment