வீடொன்றில் நகை பணம் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் பொலிஸாரால் கைது - Yarl Voice வீடொன்றில் நகை பணம் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் பொலிஸாரால் கைது - Yarl Voice

வீடொன்றில் நகை பணம் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் பொலிஸாரால் கைது

வீடு உடைத்து தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் தேடி வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

கடந்த வருடம் ஜூலை மாதம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகளை கொள்ளையடித்தது வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை போலீஸார் நீண்ட நாட்களாக தேடி வந்தனர். குறித்த திருட்டு சம்பவத்தில் 30 பவுன் தங்க நகைகளும்  வெளிநாட்டு நாணயத் தாள்களும் களவாடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போலீசார் நீண்ட நாட்களின் பின்னர் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 30 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.

சங்கானை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து இரண்டு சோடி காப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காப்புகள் திருநெல்வேலியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடைவு வைக்கப்பட்ட நிலையிலேயே பொலிஸாரால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப் சுபசிங்கே ஆகியோரின் தலமையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post