யாழில் மிக அமைதியான முறையில் புதுவருட வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் - Yarl Voice யாழில் மிக அமைதியான முறையில் புதுவருட வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் - Yarl Voice

யாழில் மிக அமைதியான முறையில் புதுவருட வழிபாடுகளும் கொண்டாட்டங்களும்

புதுவருட தினத்திலும் மக்கள் வீடுகளை விட்டுவிட்டு வெளியே செல்ல வேண்டாமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மிக அமைதியான முறையில் மக்கள் புதுவருடத்தை கொண்டாடி வருகின்றனர்.

புதுவருட தினமான இன்று கோவில்கள் பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வரும் நிலையில்இ யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப் பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இன்றைய தினம் காலை நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடா த்த முயற்சித்தனா். எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிா்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனா்.

இதேவேளை யாழ்.நகா் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளில் பொலிஸாா் ஒலிபெரு க்கிகளை பொருத்தி புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்து இந்த கொண்டாடுமாறு கேட்டு வருகின்றனா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post