வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமை ஆணைக்குழு - Yarl Voice வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமை ஆணைக்குழு - Yarl Voice

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமை ஆணைக்குழு

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் விசாரனை அறிக்கையையும் கோரியுள்ளதாக மாவட்ட இனைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்...

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 6 போலீசார் வீட்டில் இருந்த குடும்பஸ்தரை சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

சமூக ஊடகங்களிலும் ஊடகங்களில் அறியக்கூடியதாக இருந்தது.இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணையில் போலீசார் அந்த வீட்டில் உள்ள குடும்பஸ்தர் மீது தாக்கியமை தொடர்பான காணொள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்படி தற்போது வட்டுக்கோட்டை போலீசாரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு போலீசார் மீதும் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post