யாழ் மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனோ தொற்று இல்லை - Yarl Voice யாழ் மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனோ தொற்று இல்லை - Yarl Voice

யாழ் மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனோ தொற்று இல்லை

யாழ்ப்பாணம் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு கோரோனா தொற்று இல்லை என  ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்  அவர் உயிரிழந்தார்.

அவர் ஆஸ்துமா நோயாளி.  கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல் தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

எனினும் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது' என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post