வலி தெற்கு பிரதேச சபையின் தலைவர் க.தர்சனால் பிரதேச சபையில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுகாதார தொழிலாளர்களும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களின் கீழ் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றார்கள்.
அதனால் வலி தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்கருதி தவிசாளர் தர்சனால் ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இணுவில் கிராம எழுச்சியகத்தின் தலைவர் காந்தனின் நிதிப் பங்களிப்பின் மூலமே குறித்த உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
இவற்றை தவிசாளரோடு பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்.
Post a Comment