யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏழாலை தெற்று மயிலங்காடு பிரதேசத்தில் வீதியிலேயே குறித்த சடலம் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..
குறித்த பகுதியில் வீதியோரமாக ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் இன்று காலை காணப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த க.நடேசபிள்ளை வயது 82 என சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment