பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுலப்படுத்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது? சிவஞானம் கேள்வி - Yarl Voice பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுலப்படுத்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது? சிவஞானம் கேள்வி - Yarl Voice

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுலப்படுத்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது? சிவஞானம் கேள்வி

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் தாமாகவே மீள இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அரசு இதனாலேயே அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இழுத்தடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றது.எனினும் ஊரடங்கு சட்டம் இன்றுவரை சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் இன்று வரை அமல்படுத்தவில்லை.

அவ்வாறு அந்த சட்டமூலத்தை அமல்படுத்தினால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் தாமாகவே இயங்கும். ஆகவே இந்த அச்சம் காரணமாகவே கோத்தபாய அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அஞ்சி வருகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தனிவதற்கு முன்பாகவே அரசாங்கம் பல இடங்களில் ஊரடங்கு சட்டத்தை பகுதியளவில் தளர்த்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயமாக கருத வேண்டும். ஏனெனில் சுகாதார அமைப்புக்கள் மருத்துவ சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதனை கணக்கில் எடுக்காது தேர்தலை நடத்துவது லேயே குறியாக இருக்கின்றது.

அரசாங்கம் தாம் நினைத்தது போல் தேர்தலை நடத்திய தீரும் அதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை எனினும் அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதே கேள்விக் குறியாகும் என்றார்
--


0/Post a Comment/Comments

Previous Post Next Post