வீடுகளிற்குள் புகுந்து பொலிஸார் கொலைவெறித் தாக்குதல் - அச்சத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் - (படங்கள்) - Yarl Voice வீடுகளிற்குள் புகுந்து பொலிஸார் கொலைவெறித் தாக்குதல் - அச்சத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் - (படங்கள்) - Yarl Voice

வீடுகளிற்குள் புகுந்து பொலிஸார் கொலைவெறித் தாக்குதல் - அச்சத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் - (படங்கள்)

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை- மாளிகைதிடல் அம்மன் கோவிலடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாா் வீட்டிலிருந்தவா்கள் மீதும் அயல் வீட்டவா்கள் மீதும் நடாத்திய கொலைவெறி தாக்குதலில் 3 போ் காயமடைந்து மந்திகை வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று நுழைந்த பொலிஸாா் கள்ள மண் ஏற்றியதாகவும் கன்ரா் வாகனத்தை எடுத்து செல்லப்போவதாக கூறியிருக்கின்றனா். இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில்

சூடு இருக்கிறதா? என பாா்க்குமாறு வீட்டிலிருந்த இளைஞா்கள் கூறிய நிலையில் விடாப்பிடியாக பொலிஸாா் வாகனங்களை தாம் எடுத்து செல்லபோவதாக கூறினா். இதனையடுத்து பொலிஸாாின் அத்துமீறலை வீடியோ எடுத்துள்ளனா். இதனையடுத்து தொலைபேசியை பறித்து வைத்த பொலிஸாா்

கஞ்சாவை வைத்து வழக்குபோடுவோம் என அச்சுறுத்தியதுடன் வீடியோ வெளியே போககூடாது என அச்சுறுத்தியுள்ளனா். இதனையடுத்து இன்று காலை அதே வீட்டுக்கு சென்ற பொலிஸாா் மற்றும் அதிரடிப்படையினா் பெண்கள்இ ஆண்கள் சிறுவா்கள் வயோதிபா்கள் என அனைவா் மீது மிருகத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனா்.

பெண் ஒருவரை காலால் மிதித்து அவா் மயங்கி விழும்வரை அடித்துள்ளனா். இந்நிலையில் 3 போ் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இன்னும் பலா் காயமடைந்துள்ளபோதும். அவா்கள் அச்சத்தினால் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனா்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post