யாழ் மாவட்டச் செயலகத்தில் வைத்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவியானது அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதி உதவி மற்றும் உலர் உணவுப் பொருட்களும் உள்ளடங்குகின்றது.
யாழ் மாவட்டத்தில் 820 மில்லியன் ரூபா நிதியானது 448 சிறுநீரக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளடங்களாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 975 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 24 மெற்றிக் தொன் கோதுமை மாவினை 11 ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
Post a Comment