தென்கொரியாவில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவில் நேற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருந்தது.
வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்களித்திருந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒவ்வொருவரும் வெப்பமானி சோதனைக்கு பிறகே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் கை தூய்மைக்கான கிருமிநாசினி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஒருமுறை பயன்படுத்தும் கையுறை அளிக்கப்பட்டது. அதை அணிந்து விருப்பமான வேட்பாளர்களின் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.
சுயமாக தனிமையில் உள்ளோருக்கு இதர வாக்காளர்களுக்கான நேரம் நிறைவடைந்ததும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
Post a Comment