யாழ்ப்பாணத்தில் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தினர் உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்
தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாது பல்வேறுபட்ட மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அதிகமான இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை மஹோட்சவம் நடை பெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
எனவே ஆலய நிர்வாகிகள் உணவின்றிதுன்பப் படுகின்ற மக்களுக்கு அந்த ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கிய நிதியில் ஒரு பகுதியினை யாவது துன்படுகின்ற மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே நாம் பசியால் கஷ்டப்படுகிற துன்பப்படுகின்றவர் களுக்கு எமது ஆலய மகோட்சவத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியினையாவது கஸ்டப்படுகின்ற மக்களுக்கு வழங்கி உதவ முன்வரவேண்டும் எனவும் இந்த விடயத்தினை யாழ்ப்பாணத்திலுள்ள ஆலய நிர்வாகங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு உதவி செய்ய விரும்புபவர்கள் தத்தமது பிரதேச செயலர் ஊடாக அனுமதி இணைப்பு பெற்றுஏனைய மதத்தவர்கள் வழங்குவது போல நாமும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment