2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகின்றது. இதனை முன்னிட்டு இன்று தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று காலை 8.45க்கு கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் கொழும்பு கிங்ஸ்பெரி சின்னமன் லேக்சைட் ஷெங்கரில்லா நட்சத்திர ஹோட்டல்கள் தெஹிவளை ட்ரோபிக்கா ஹோட்டல் ஆகியவற்றில் தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கவைத்து அப்பாவி உயிர்களைக் காவுகொண்டனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 250க்கும் அதிகமானவர்கள் பலியானதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இன்னும் சிலர் அங்கவீனர்களானார்கள்.
தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பே இந்த தற்கொலை தாக்குதலை சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்ஸுடன் இணைந்து நடத்தியதாக கூறப்பட்டது.
தாக்குதல் நடத்துவது பற்றிய முழு விபரமும் அப்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்த போதிலும் அதனை அரசாங்கம் தடுக்கத் தவறியது என்றும் குற்றச்சாட்டு உள்ளதோடு தற்போது விசாரணைகளும் தொடர்கின்றன.
Post a Comment