தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நலம் விசாரித்த அஜித் - Yarl Voice தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நலம் விசாரித்த அஜித் - Yarl Voice

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நலம் விசாரித்த அஜித்

கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் தொலைபேசி ஊடாக நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் படிப்பை முடித்துவிட்டு குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம் தினமும் தொலைபேசி ஊடாக பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின. இதுபற்றி அறிந்த நடிகர் அஜித் உடனே விஜய்யிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

'சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது' என கேட்டுள்ளார். 'பயப்படும்படியாக எதுவும் இல்லை. சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ' என்று விஜய் கூறியுள்ளார்.

விஜய்யும் அஜித்தும் இதுபோல் அவ்வப்போது தொலைபேசி ஊடாக பேசுவது வழக்கமான ஒன்று தான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post