நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் பாதிக்கப்படும் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரனால் 5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு நீர்கொழும்பு கட்டுநாயக்கா குருநாகல் நுவரேலியா தலவாக்கொல பதுளை முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுள்ளன.
உணவின்றி தவிக்கும் மக்களுக்கு சேவை செய்ய முன்வரும் அரசியல்வாதிகள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இளைஞர்கள் தன்னார்வ தொண்டாளர்கள் போன்றோர் ஊடாக நிதியினை வழங்கி உணவுப் பொதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
கொவிட் 19 - சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment