கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பல இடங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் எலிக்காய்ச்சலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் மட்டும் 1352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் கடந்த ஜனவரி மாதம் 665 நோயாளர்களும் பெப்ரவரி மாதம் 453 பேரும் மார்ச் மாதம் 188 பேரும் ஏப்ரலில் 45 பேரும் இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் கொரோனோ வைரஸ் ஒருபுறம் தாக்கத்தை ஏற்படுத்தி வர எலிக்காய்ச்சலும் மறுபுறம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் நாட்டில் பலரும் பாதிக்கப்படுகின்ற நிலைமையே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment