கசிப்பு எனும் மதுபானத்தை பைக்கற்களில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
சட்டவிரோதமான முறையில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற இருவரை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது குறித்த இரு சந்தேக நபர்களிடமிருந்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கசிப்பினை போலீசார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 6 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.சிறிய சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Post a Comment